கொழும்பில் அதிகமாக பரவும் டெங்கு

இலங்கையில் டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள 12 மாவட்டங்களின் 81 பிரதேச செயலாளர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், அம்பாறை, திருகோணமலை, கொழும்பு, கம்பகா, புத்தளம், களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு டெங்கு பரவும் அபாய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 411 பேர் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, கம்பகாவில் 305 பேரும், களுத்துறையில் 120 பேரும், குருநாகலில் 109 பேரும், புத்தளத்தில் 96 பேரும், காலியில் 83 பேரும், கண்டியில் 73 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 2 மரணங்களும் பதிவாகின என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பில் அதிகமாக பரவும் டெங்கு

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House