
posted 27th January 2022
கோவிட் தொற்று காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்களுக்கு நேற்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோகம், கடவுச்சீட்டு விண்ணப்பம் பெறுதல் என அனைத்து செயற்பாடுகளும் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டு பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்த உத்தியோகத்தர்களுக்கும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House