கிழக்கில் தொடரும் பெருமழை

கிழக்கிலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் காலநிலை மோசமடைந்திருப்பதுடன், தொடர்ச்சியான பெருமழையும் பெய்துவருகின்றது.
குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மழை வீழ்ச்சி பெரிதும் அதிகரித்துள்ளதால் பல இடங்களிலும் தாழ்நிலப்பிரதேசங்கள் மழை நீர் நிறைந்து வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றது.

குடியிருப்பு வீடுகள், உள்ளுர் வீதிகள், மைதானங்கள், விவசாயக் காணிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்து காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சில சமயங்களில் இரவு, பகலாகத் தொடரும் உக்கிர மழை காரணமாக வீடுகளை விட்டும் வெளியேற முடியாமலும், வெளியில் நடமாட முடியாமலும் பெரும் கஷ்டங்களுக்குள்ளாகும் நிலமையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அன்றாட தொழில்களும் பாதிக்கப்பட்டு சாதாரண மக்கள் வருமானமிழந்து பொருளாதார கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை தற்போதய சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் பெருக்கம் ஏற்பட்டுள்ளதுடன், முக்கிய சில பிரதேசங்களில் உக்கிர கடலரிப்பும் ஏற்பட்டுள்ளதால் கடல் மீன்படித்தொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு காரணமாக ஆழ்கடல் மற்றும் கரைவலை மீன்படித்தொழில்கள் முற்றாகஸ்தம்பிதமடைந்துள்ளன.

கடற்கரையை அண்டியதாக தமது தோணிகளையும், இயந்திரப்படகுகளையும் நிறுத்திவைத்திருந்த மீனவர்கள் அவற்றை கடல் பெருக்கம், கொந்தளிப்பு காரணமாக மேட்டுப் பகுதிகளை நோக்கி நகர்த்தியுமுள்ளனர்.

மாவட்டத்தின் முக்கிய பிரதேசமான நிந்தவூர்ப் பகுதி கடலரிப்பினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுவரும் அதேவேளை எதிர்காலத்தில் கரையை அண்டிய கூடிய பகுதிகள் கடலால் விழுங்கப்படும் அபாய நிலமையும் ஏற்படலாமென அச்சமும் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கில் தொடரும் பெருமழை

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House