கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்களில் ஒரு சிறுவன் உயிரிழந்தான்

நண்பர்களுடன் காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் அலை அடித்துச் சென்றதில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கோண்டாவில் - தில்லையம்பதியை சேர்ந்த யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கற்றுவரும் யோகராசா யோகீசன் வயது - 17 என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் கோண்டாவிலை சேர்ந்த 20 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று சுற்றுலாவாக காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்றிருந்தது.

இவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது இரு இளைஞர்களை கடல் அலை அடித்துச் சென்றது. இளைஞர்களின் உதவிக்குரல் கேட்டு அப்பகுதியில் நின்றிருந்த கடற்படை ஓர் இளைஞரை காப்பாற்றியது. மற்றைய இளைஞரை அப்பகுதி மீனவர்களும் சேர்ந்து நெடுநேரம் தேடியது.

நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார் என்று அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்களில் ஒரு சிறுவன் உயிரிழந்தான்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House