
posted 5th February 2022
உள்நாட்டு பொறிமுறையில் ஒரு தீர்வும் கிடைக்காது என காலாகாலமாக நாம் கூறிவருகிறோம். ஆனபடியால் அந்த கேள்விக்கே இடமில்லை என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கையின் சுதந்திர தினமான இன்று தமது மத உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தொடரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் எதிப்பை காண்பிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைக்கான கவனயீர்ப்பு விஜயம் ஒன்று இடம்பெற்றது.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று குறித்த கவனயீப்பு நடவடிக்கையில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் என சுமார் 75 பேர் வரையில் கலந்துகொண்டனர்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House