
posted 20th January 2022
தலைமன்னார் பாக்கு நீர் ஊடாக கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் ஐஸ் என்ற போதை பொருளுடன் இளைஞர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது;
புதன்கிழமை (19.01.2022) பிற்பகல் தலைமன்னார் கிராமத்திலுள்ள கடற்கரை பகுதியில் வெளிக்கள படகு ஒன்றை கடற்படையினர் சந்தேகத்தின் நிமித்தம் சோதனையிட்டபோது அதற்குள் இருந்து 485 மில்லி கிராம் ஐஸ் என்ற போதை பொருளை கைப்பற்றியுள்ளனர்.
இதன் நிமித்தம் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் சந்தேகத்தின் நிமித்தம் அவ்விடத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இவ் இளைஞனையும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருளையும் கடற்படையினர் தலைமன்னார் பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பொலிசார் இச் சந்தேக நபரை விசாரனைக்கு உற்படுத்தியுள்ளதுடன், இவரையும் கைப்பற்ப்பட்ட போதை பொருளையும் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இப் போதைப் பொருள் தலைமன்னார் பாக்குநீர் வழியாக கடத்தி வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House