
posted 23rd January 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டு தமிழக மீனவர்களிடமிருந்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு தற்பொழுது அரசுடமையாக்கப்பட்டுள்ள 105 இலுவைப்படகுகள்,; விசைப் படகுகள் மற்றும் கடற்கலங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட இருப்பதாக நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் மாவட்டப் பிரதிப் பணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இவ் கடற்கலங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்தந்த இடங்களில் வைத்தே பகிரங்க ஏலவிற்பனையில் விடப்பட இருப்பதாகவும் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் மாவட்டப் பிரதிப் பணிப்பாளர்களுக்கு எழுத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் படகுகள் பகிரங்க ஏலத்தில் விடப்படும்; இடங்களும் கடற்கலங்களின் எண்ணிக்கையும் தினங்களும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் 65 கடற்கலங்கள் பெப்ரவரி 7 ஆம் திகதி,
காங்கேசன்துறை 05 கடற்கலங்கள் பெப்ரவரி 8 ஆம் திகதி,
கிராஞ்சி 24 கடற்கலங்கள் பெப்ரவரி 9 ஆம் திகதி
தலைமன்னார் 09 கடற்கலங்கள் பெப்ரவரி 10 ஆம் திகதி
கற்பிட்டி 02 கடற்கலங்கள் பெப்ரவரி 11 ஆம் திகதி
இவ் ஏலவிற்பனையானது அந்தந்த தினங்களில் காலை 10 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இவ் ஏலவிற்பனை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House