
posted 21st January 2022
கிளிநொச்சி தருமபுரம் நெத்தலியாறு பிள்ளையார் ஆலய வயல் பகுதியில் 'ஏர் நிலம்' அமைப்பின் பொங்கல் விழா இடம்பெற்றது. அத்துடன் இவ் நிகழ்வில் விவசாயிகள் கௌரவிப்பும் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக தருமபுரம் ஆரம்ப பாடசாலையில் இருந்து ஆலயம் வரை மங்கள வாத்தியங்கள் முழங்க விவசாயிகள் அழைத்து வரப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மன்னார் பெனில் தலமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த மேடை நிகழ்வுகளpல் கிளிஃமுருகானந்தா பாடசாலை அதிபரின் சிறப்புரையுடன் சிறப்பு விருந்திரர்களான விவசாயிகள் கெளரவிக்கப்பட்டு அவர்களுக்கு ஏர் நிலத்தின் நினைவு சின்னமும் வருகைதந்த மாணவச் சிறார்களுக்கு பரிசுப்பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த பொங்கல் விழாவிற்கான நிதியுதவியை சுவிட்சர்லாந்து வாழ் தமிழுறவு திரு.துரைராசா-லிங்கேஸ்வரன் வழங்கியுதவpயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராம மக்கள் கிராம உத்தியோகஸ்தர் பொது அமைப்புகள் என பலர் கலந்து சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House