
posted 20th January 2022
யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு அருள்மிகு ஸ்ரீசந்திர சேகரப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகமும், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஞ்சதள இராஜகோபுர கும்பாபிசேகமும் எதிர் வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.32மணிமுதல் 11.22மணி வரையிலான சுப வேளையில் நடைபெறவுள்ளது.
இதற்கான கிரிகைகள் கடந்த புதன்கிழமை காலை 5.30மணிக்கு ஆரம்பமாகி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி நாளை சனிக்கிழமை காலை 6மணி தொடக்கம் பிற்பகல் 3மணிவரை எண்ணெய்க்காப்புச்சாத்தலாம். இக்கும்பாபிஷேகத்தை கல்வியங்காடு சிவாச்சார்ய திலகம் சிவஸ்ரீ சதா இராதாகிருஷ்ணக்குருக்கள் பிரதிஸ்டா பிரதம குருவாக இருந்து நடாத்தி வைப்பார்.
கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் ஆரம்பமான நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 6.45மணியளவில் ஆலயத்தின் மேற்குப் புறவாசலில் புதிதாக அமைக்கப்பட்ட அலங்கார வளைவு திறப்பு விழாவும் கலாச்சாரமண்டபுகு விழாவும் சிறப்பாக நடைபெற்றன. நேற்று வியாழக்கிழமை பஞ்சதள நாய கன் இறுவட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House