
posted 2nd January 2022
முல்லைத்தீவு குமுழமுனை மேற்கு கரடிப்பூவல் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உடல்நிலை பாதிக்கப்பட்ட யானைக் குட்டி ஒன்று விவசாய நிலத்தில் வீழ்ந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், நடக்கமுடியாத நிலையில் நிலத்தில் வீழ்ந்த நிலையில் அந்த யானைக் குட்டி காணப்படுகின்றது.
சுமார் மூன்றரை வயதுடைய அந்த யானைக் குட்டி வாயில் காயத்துடன் உள்ள நிலையில் உணவு உட்கொள்ள முடியாத நிலையில் அந்த யானைக் குட்டி விளைநிலத்தில் வீழ்ந்து கிடந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் அந்தப் பகுதிக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை மருத்துவர் டி.கிரிதரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானை குட்டிக்கு சிகிச்சையளித்தனர்.
யானையின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார்கள், இருந்தும் யானைக் குட்டி எழுந்து நடக்கமுடியாத நிலையில் காணப்படுகின்றது என்று அறிய வருகின்றது.


எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House