74 வது சுதந்திர தினம் மன்னாரில் திறம்படக் கொண்டாட ஏற்பாடுகள்

எதிர்வரும் 4 ந் திகதி இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை 72 வது சுதந்திர தினத்தை மன்னாரில் சிறப்பாக கொண்டாடியது போன்று இம்முறையும் மன்னாரில் நாற் படைகளின் ஒத்துழைப்புடன் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக புதன் கிழமை (19.01.2022) மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் இது சம்பந்தமான திணைக்கள அதிகாரிகள் மற்றும் நான்கு படைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், கொரோனா தொற்று கட்டுப்பாட்டுகளுக்கமைவாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதனின் அறிவுரைக்கு அமைவாக இவ் விழா சிறப்பிக்கப்பட இருப்பதாக இவ் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

74 வது சுதந்திர தினம் மன்னாரில் திறம்படக் கொண்டாட ஏற்பாடுகள்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House