
posted 16th January 2022
எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மத்திய அதிவேக வீதியில் பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கொழும்பு – கண்டி, மற்றும் கொழும்பு – குருணாகல் பகுதிகளுக்கு இடையிலான பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.
அதிவேக வீதியூடான பஸ் கட்டணங்கள் எதிர்வரும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருணாகல் மற்றும் யக்கபிட்டி வரை பயணிப்பதற்கான நுழைவு கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, இலகுரக வாகனங்களுக்கான நுழைவு கட்டணமாக 250 ரூபாவும் பஸ் உள்ளிட்ட 6 டயர்களுடன் பயணிக்கும் வாகனங்களுக்கு மீரிகமயிலிருந்து குருணாகல் மற்றும் யக்கபிட்டிக்கு பகுதிக்கான நுழைவுக்கட்டணமாக 350 ரூபா அறவிடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மத்திய அதிவேக வீதியின் எத்துகல்புற நுழைவாயில், மக்கள் பாவனைக்காக நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House