விழிப்புணர்வு

இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனங்களுள் ஒன்றான அலியான்ஸ் காப்புறுதி நிறுவன கல்முனைக் கிளையினர் கல்முனை மாநகரில் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.

நாட்டின் எதிர்கால சந்ததியினரான சிறார்களுக்கு பாதுகாப்பான பாடசாலை பயணத்தை அளிக்கும், பாடசாலை மாணவர்களுக்கே என உருவாக்கப்பட்ட பேரூந்து மற்றும் வேன்காப்புறுதி தொடர்பிலான அலியான்ஸ் மோட்டார் காப்புறுதி தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

கல்முனை பஸ் நிலையம் உட்பட முக்கிய பாடசாலைகள் முன்பாகவும் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் அலியான்ஸ் வலயமுகாமையாளர் யூ.எல்.நஸார், கல்முனைகிளை முகாமையாளர் ஜீ.தேவசீலன், வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.தமீஸ் உட்படகிளை அதிகாரிகள் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது குறித்த பேரூந்து மற்றும் வேன்காப்புறுதி தொடர்பான விழிப்பூட்டல் பிரசுரங்கள் விநியோகிக்க்கப்பட்ட அதேவேளை, கொவிட் தொற்றினை இல்லா தொழிப்பதற்கான சுகாதார நடைமுறைகள் பற்றிய நிறுவனத்தின் மற்றொரு சமூக நலத்திட்டமாக ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டன.

விழிப்புணர்வு

எ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House