
posted 26th January 2022

“சமூகத்தில் பல்துறைசாரந்த மக்கள் சேவையாளனாகத்திகழ்ந்தவர் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் மர்ஹூம் ஏ.எல்.எம்.அமீன் ஆவார். அவரது இழப்பு பேரிழப்பாகும்.”
இவ்வாறு இலங்கையின் முக்கிய ஊடகவியாலாளர் அமைப்பான முஸ்லிம் மீடியாபோரம் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூரைச் சேரந்த பிரபல கல்வியியலாளரும், கிழக்கின் மூத்த ஊடகவியலாளரும், சமூககப்பற்றாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம். அமீனின் மறைவு குறித்து இந்த அனுதாப அறிக்கை போரத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம் மீடியாபோரம் சார்பில் அதன் தலைவர் அல்-ஹாஜ் என்.எம். அமீன் இந்த அனுதாப அறிக்கையைவிடுத்துள்ளார்.
தலைவர் அல்-ஹாஜ் அமீன் இந்த அனுதாப அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“கிழக்கில் சிறந்த ஊடகவியலாளராகத்திழ்ந்த மர்ஹூம் அமீன் பின்னாட்களில் ஒரு சிறந்த ஆசிரியராக, அதிபராக, கோட்டக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி பிரதேச கல்வி முன்னேற்றத்தில் அளப்பரிய சேவையாற்றி தடம் பதித்ததுடன், முஸ்லிம்களின் திருமண விவகாரங்கள் தொடர்பிலான குவாஸி நீதவானாகவும் தமது மக்கள் சேவையைத் தொடர்ந்தார்.
எமது நவமணி பத்திரிகையுடனும் முஸ்லிம் மீடியாபோரத்துடனும் நீண்டகால தொடர்பு கொண்டிருந்த மர்ஹூம் அமீன் கிழக்கில் தமிழ் - முஸ்லிம் நல்லுறவுப் பாலமாகத் திகழ்ந்து வந்ததுடன், இன்றைய பல ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
அன்னாரது இழப்பு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். அல்லாஹ் அவருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸை வழங்கப்பிரார்த்திப்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House