
posted 30th January 2022
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வீதியில் இருந்து தோணாவை ஊடறுத்துச் செல்லும் பாலம் கிழக்கு மாகாண சபையின் எல்.டி.எஸ்.பி. திட்டத்தின் கீழ் சுமார் 53 இலட்சம் ரூபா நிதியில் கல்முனை மாநகர சபையினால் மீள் நிர்மாணம் செய்யப்படவுள்ளது.
இந்த நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 03 ஆம் திகதி ஆரம்பம் செய்து வைக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பான விசேட கலந்துரையாடல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் உட்பட சாய்ந்தமருது பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம். றபீக், அப்துல் அஸீஸ், ஏ.ஆர். அஸீம், எம்.எம். ஜௌபர், என்.எம். றிஸ்மீர், நஸ்ரின் முர்ஷித், ஆயிஷா சித்தீக்கா, சுஹைல் அஸீஸ், எஸ்.மெளபியா, எல்.டி.எஸ்.பி. திட்ட பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி, உள்ளுராட்சி உத்தியோகத்தர் எம். நெளஷாத், முன்னாள் உறுப்பினர் முஹர்ரம் பஸ்மீர் மற்றும் வேலைத் திட்ட ஒப்பந்தக்காரர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
தற்போது பாவனையில் இருந்து வருகின்ற சிறிய பாலம் முறையாக அமைக்கப்படாததால் அது உடைந்து, வாகனப் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது. இதையடுத்தே குறித்த பாலத்தை மீள் நிர்மாணம் செய்வதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House