
posted 23rd January 2022
பல மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள எரிபொருள் கையிருப்பு குறைவடைந்துள்ளதால் செவ்வாய் (25) இரவு முதல் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நீர் மின் உற்பத்தி நேற்று மொத்த மின் தேவையில் 25 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் நிலக்கரி, டீசல் மற்றும் உலை எண்ணெய் மூலம் மின் உற்பத்தி 72 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தேசிய மின் கட்டமைப்பிற்கு சுமார் 108 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம், அதன் இயக்கத்துக்கு தேவையான உலை எண்ணெய் இல்லாததால் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் ஊடாக இழந்த மின்சாரத் திறன் எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் மீளமைக்கப்படும் என இலங்கை மின்சார சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House