
posted 17th January 2022
மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள்திருத்த வேலைகள் இப் பகுதியிலுள்ள கமநல சேவைகள் நிலையங்களில் மேற்கொளள்ப்பட்டு வருவதால், மன்னார் மாவட்டத்தில் உள்ள 13 கமநல சேவைகள் நிலையங்களிலும் வயற்காணி பதிவேடுகளை விவசாயிகள் பார்வையிட முடியும் எனவும், தங்களது காணிப் பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளவும் எனவும் இவ் வட்டாரம் மன்னார் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மன்னார் கமநல சேவைகள் நிலையம் மன்னார் விவசாயிகளுக்கு விடுத்திருக்கும் அறிவித்தலில்;
மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள்திருத்த வேலைகள் இடம்பெற்று வருகின்றன. ஆகவே வயற்காணி இடாப்பு மீள்திருத்த வேலைகளின் பொருட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள 13 கமநல சேவைகள் நிலையங்களிலும் வயற்காணி பதிவேடுகளை விவசாயிகள் பார்வையிட முடியும் என்பதுடன் வயற்காணிப் பதிவேட்டில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள கமக்காரர்கள் தங்கள் வயற்காணி அமைந்துள்ள கமநல சேவைகள் நிலையங்களில் உரிய விண்ணப்பப்படிவங்களைப் பெற்று பூரணப்படுத்தி தேவையான ஆவணங்களுடன் கமநல சேவை நிலையங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் வயற்காணிப் பதிவைத் திருத்திக் கொள்ள முடியும்.
இதுவரை தங்கள் காணி தொடர்பில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காத கமக்காரர்களும் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தங்கள் காணிப் பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
வயற்காணி இடாப்பு மீள்திருத்தம் தொடர்பான மேலதிக விபரங்களை தங்கள் பகுதிக்குப் பொறுப்பான விவசாய ஆராய்சச்சி உற்பத்தி உதவியாளரை அல்லது கமநல சேவைகள் நிலையங்களை தொடர்பு கொணடு பெற்றுக் கொள்ளலாம்.
2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள்திருத்த வேலைகள் ஜனவரி மாதத்திற்குள் முடிவுறுத்தப்படவுள்ளமையால், சுகாதார வழிகாட்டல்களுக்கமைய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இவ் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் அனைத்து கமக்காரர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House