மன்னாரில் 2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகள் ஆரம்ப நிகழ்வு

மன்னார் மாவட்ட செயலகத்தின் 2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் திங்கள் கிழமை (03.01.2022) காலை 9 மணிக்கு இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் 02 நிமிடங்கள் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் அவர்களால் கொவிட் 19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி உரை நிகழ்த்தப்பட்டது.

பின் மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டீமெல் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய முன்னுரிமைகள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அரச சேவையின் பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டும் என்ற தொணிப் பொருளில் உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் கடமைபுரியும் யாவருக்கும் அரச அதிபரால் கைவிகலம் வழங்கப்பட்டதுடன் உபசரனைகளும் இடம்பெற்றன.

மன்னாரில் 2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகள் ஆரம்ப நிகழ்வு

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House