பொங்கல் நிகழ்வு யாழ். முற்றவெளியில்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலைப் பொங்கல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (14) யாழ். முற்றவெளியில் இடம்பெற்றது.

பல வருடங்கள் அரசியல் கைதிகளாக சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை பொங்கல் தினத்தில் அல்லது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த விடுதலைப் பொங்கல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகளாக இருந்து விடுதலை பெற்ற குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் பொங்கல் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் சிலரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது உறவினர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள், யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொங்கல் நிகழ்வு யாழ். முற்றவெளியில்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House