பிரதமரின் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்து

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை (21.01.2022) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்தொன்று வழங்கிவைக்கப்பட்டது.

கீர்த்தி மந்த்ரிரத்ன அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இப்பேருந்து ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 54 ஆசனங்களை கொண்ட சொகுசு பேருந்தாகும்.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் எம்.வீ.எஸ்.குணதிலக அவர்களிடம் பேருந்தின் திறவுகோலினை வழங்கிவைத்தார்.

அதனை தொடர்ந்து பேருந்திலுள்ள வசதிகளை கௌரவ பிரதமர் பார்வையிட்டார்.

இப்பேருந்தினை அன்பளிப்பாக வழங்கிய கீர்த்தி மந்த்ரிரத்ன அவர்களுக்கு கௌரவ பிரதமர் நினைவு சின்னமொன்றை வழங்கியதுடன்இ கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் எம்.வீ.எஸ்.குணதிலக அவர்களினால் கௌரவ பிரதமருக்கும் நினைவு பரிசொன்று வழங்கப்பட்டது.

கௌரவ பிரதமர் அவர்கள் நிதியமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமனாத் சீ தொலவத்த அவர்களின் தலையீட்டின் கீழ் இப்பேருந்திற்கான வரி நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன. ஓய்வுபெற்ற உதவி அதிபர் அஷோக கலஹிடியாவ இத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமனாத் சீ தொலவத்தஇ கொழும்பு றோயல் கல்லூரியின் துணை அதிபர் கிரிஷாந்த சில்வாஇ கல்லூரியின் பெற்றோரை பிரதிநிதித்துவப்படுத்தி மஹேஷ் குணரத்ன அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமரின் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்து

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House