
posted 21st January 2022
தமிழ் இலக்கிய உலகில் பிரபலமாக அறியப்பட்ட கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கலாபூஷணம் பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் இலக்கியப் பொன்விழா, பெருவிழாவாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.
பாவேந்தல் பாறூக்கின் ஐம்பது வருட இலக்கியப் பணியைப் பாராட்டி நடைபெற்ற இந்த இலக்கியப் பெருவிழாவையொட்டி, விழா நடைபெற்ற அன்றைய தினம் பாறூக்கின் பிறந்த மண்ணான பாலமுனைப் பிரதேசமெங்கும் பெருவிழாக்கோலம் பூண்டிருந்தது.
பாலமுனையின் பல்வேறுபகுதிகளிலும் பொன்விழாவையும், பொன்விழா நாயகனையும், வாழ்த்தி வரவேற்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டு பிரதேசமே முழு விழாக்கோலம் பூண்டிருந்தது.
நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவை, உட்பட பல்வேறு கலை, இலக்கிய அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், கழகங்கள் போன்றவை வாழ்த்தி வரவேற்ற பதாதைகள் பெரும்பாலும் காணப்பட்டன.
தமிழ் இலக்கிய உலகில் பிரபலமாக அறியப்பட்ட கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கலாபூஷணம் பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் இலக்கியப் பொன்விழா, பெருவிழாவாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.
பாவேந்தல் பாறூக்கின் ஐம்பது வருட இலக்கியப் பணியைப் பாராட்டி நடைபெற்ற இந்த இலக்கியப் பெருவிழாவையொட்டி, விழா நடைபெற்ற அன்றைய தினம் பாறூக்கின் பிறந்த மண்ணான பாலமுனைப் பிரதேசமெங்கும் பெருவிழாக்கோலம் பூண்டிருந்தது.
பாலமுனையின் பல்வேறுபகுதிகளிலும் பொன்விழாவையும், பொன்விழா நாயகனையும், வாழ்த்தி வரவேற்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டு பிரதேசமே முழு விழாக்கோலம் பூண்டிருந்தது.
நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவை, உட்பட பல்வேறு கலை, இலக்கிய அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், கழகங்கள் போன்றவை வாழ்த்தி வரவேற்ற பதாதைகள் பெரும்பாலும் காணப்பட்டன.
நாட்டின் பலபாகங்களிலிருந்தும் வருகைதந்த பிரமுகர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் பெருமளவில் இந்த இலக்கியப் பொன்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
பாலமுனை, பொறியியலாளர் மர்ஹூம் எம்.சீ.எம்.அமீர் மண்டபத்தில், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடாதிபதி யூ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் பாவேந்தல் பாறூக்கின் இந்த இலக்கியப் பொன்விழா நடைபெற்றது.
விழாவில் தேசிய காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா, முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், முன்னாள் முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் உட்பட மேலும்பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இஸ்லாமிய பாரம்பரிய நிகழ்வுகள் சகிதம் பொன் விழா நாயகன் பாவேந்தல் பாறூக் வரவேற்றுவிழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவருக்கு பலரும் மாலைகள்அணிவித்து நினைவுச்சின்னங்களுடன் பொன்னாடைகள் போர்த்தியும் பல தரப்பினரும் விழாமேடையில் பெரும் கௌரவமளித்தனர்.
மேலும் விழா ஆரம்பத்தில், நாட்டில் மரணித்த எழுத்தாளர்களின் ஆத்மசாந்திக்காக மௌனப் பிரார்த்தனையும் இடம் பெற்றதுடன், விழா ஞாபகர்த்தமாக பாவேந்தலுக்கான சிறப்பு மலரொன்றும் வெளியிடப்பட்டது.
மொத்தத்தில் பொன்விழா பெருவிழாவாகவும், அவரது 50 ஆண்டுகால கலை, இலக்கிய சேவைக்கு பெரும் மகுடம் சூட்டி கௌரவமளிக்கப்பட்ட விழாவாக வெற்றிகரமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்எ.ம்சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House