பாரிய அசம்பாவிதத்திலிருந்து தப்பிய படகு

யாழ்ப்பாணத்திற்குஅருகில் உள்ள நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவை இடம்பெற்றபோது பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது.

நேற்று புதன்கிழமை காலை 100இற்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திரதேவி படகு இடைநடுவில் பழுதடைந்த நிலையில் பின்னர் வடதாரகைப் படகின் உதவியுடன் குறிகட்டுவான் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது.
நெடுந்தீவில் இருந்து காலை குறிகட்டுவான் நோக்கிப் பயணித்த பயணிகள் படகின் சுக்கான் நடுக் கடலில் உடைந்து தத்தளித்தது. உடனடியாக வடதாரகை அங்கு வரவழைக்கப்பட்டது.

ஆயினும் பயணிகளை வடதாரகை படகுக்கு மாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. பல இடையூறுகள் மத்தியில் வடதாரகை சமுத்திரதேவியை இழுத்து சென்றது.

காலை 07.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்ட மக்கள் முற்பகல் 10.00 மணியளவில் குறிகட்டுவான் இறங்கு துறைக்கு பாதுகாப்பாகச் சென்றடைந்தனர்.

பாரிய அசம்பாவிதத்திலிருந்து தப்பிய படகு

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House