
posted 10th January 2022
உள்ளூராட்சி சபை பதவி காலம் நீடிப்பு
எஸ் தில்லைநாதன்
இலங்கையில் அனைத்து உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி நேற்றிரவு வெளியிடப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இவற்றின் பதவிக்காலம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைகின்றது.
இந்த நிலையிலேயே, உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை 2023 மார்ச் 19ஆம் திகதி வரை நீடித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி
வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக றம்புக்கணை பொலிஸ் நிலையத்தில் உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி இன்று முற்பகல் 10.26 மணிக்கு சுபநேரத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்
வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ.மானவடு கடந்த புதன்கிழமை கொஸ்வத்தை பகுதிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து அந்த வெற்றிடத்துக்கு ஜெயக்கொடி பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டார் .
இந்நிகழ்வில் சமயத்தலைவர்களின் ஆசியுடன் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனது கடமைகளை ஆரம்பித்தார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House