
posted 9th January 2022
காரும் லொறியும் விபத்தில் சிக்கின
இலங்கையில் ஏ-9 நெடுஞ்சாலையின் நாவற்குழி பாலத்துக்கு அண்மையாக காரும் லொறியும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்து நாவற்குழி சந்திக்கும் - பாலத்துக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. இதில், காரில் பயணித்தவரே படுகாயங்களுக்கு உள்ளானார்.
லொறியை முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. விபத்தில் காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திங்கட்கிழமை (10) முதல் மின்வெட்டு
நாளை திங்கட்கிழமை முதல் மின்வெட்டு அமுல்படுத்துப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(ஜன-10) முதல் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மின் வெட்டு இடம்பெறும்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House