
posted 10th January 2022


கல்முனை கல்வி வலயத்தைச் சேரந்த நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசியப் பாடசாலையின் வரலாற்றில், பாடசாலை கடேற்பிரிவைச் சேர்ந்த இரு மாணவர்கள், முதற் தடவையாக மாணவச் சிப்பாய்படையணி பொலிஸ் பிரிவில் பதவி உயர்வுபெற்றுள்ளனர்.
ஆர்.எம்.நிஸ்மி இலாஹி, எம்.ஐ.எம்.நப்றீஸ் எனும் இருமணவர்களே இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அக்கறைப்பற்று 40 ஆம் கட்டடையிலுள்ள 31 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி தலைமையில், பதவி உயர்வு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் விசேடமாக நியமிக்கப்பட்ட அதிகாரி பதவி உயர்வுக்கான சின்னங்களைச் சூட்டி பதவி உயர்வுகளை வழங்கினார்.
தமது பாடசாலைக்கும், பிரதேசத்திற்கும் இதன் மூலம் பெருமை சேர்த்த இரு மாணவர்களுக்கும் பெரும் பாராட்டுக்கள் தெரிவி;க்கப்பட்டுள்ளன.

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House