பணிப்பாளர் அஸ்லமுக்கு கௌரவம்

பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொண்ட சம்மாந்துறை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், அப்பிரதேச செயலகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர். எஸ்.எல்.ஆதம்பாவா உட்பட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், பிரதம கணக்காளர் உள்ளிட்ட அதிகாரிகளினால் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறையில் முதல் நிலையில் சித்தியடைந்திருந்த இவர், இலங்கை திட்டமிடல் சேவையில் சித்தியடைந்து, பல பிரதேச செயலகங்களில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி, தற்போது சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பணியாற்றி வருகின்றார்.

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவரான இவர், சாய்ந்தமருதை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் மர்ஹூம் அஹ்மட் லெப்பை தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணிப்பாளர் அஸ்லமுக்கு கௌரவம்
பணிப்பாளர் அஸ்லமுக்கு கௌரவம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House