
posted 15th January 2022
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் சிறுவர்களுக்கான பட்டப் போட்டி மிக சிறப்பாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு இடம் பெற்ற போட்டியில் ஒன்பது பட்டங்கள் போட்டியில் பங்கு கொண்டன.
நாகர்கோவில் கிராமத்தில் முதல் தடவையாக இடம்பெற்ற இப் பட்டப் போட்டியில் முதலாம் பரிசான ரூபா 5000/- வை அருந்தவராசா மதுஷா எனும் சிறுமி பெற்றுக் கொண்டதுடன் , இரண்டாம் இடத்தினை பெற்று 3000/- ரூபா பணப் பரிசினை சவுந்தர்ராஜன் சந்துரு பெற்றுக் கொண்டார், மூன்றாம் இடத்தினை பெற்று ரூபா 2000/ பண பரிசினை யோகநாதன் நிரூஜன் பெற்றுக் கொண்டார்.
இதே வேளை ஏழு போட்டியாளர்களுக்கான ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப் பட்டப் போட்டியின் நடுவராக தொழிலதிபர் திரு ரகு அவர்கள் கடமையாற்றினார். பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரும் போட்டி ஏற்பாட்டாளருமான ஆ. சுரேஸ்குமார் ஆகியோர் வழங்கி வைத்தனர்
இப் பட்டப் போட்டியினை பார்வையிடுவதற்க்காக நாகர்கோவில் பகுதியில் இருந்து, சுமார் நாநூறு பேர் வரை கலந்து கொண்டிருந்தமை குறிப்பிட தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House