செயலாளரை அச்சுறுத்திய வெளிநாட்டுப் பிரஜை

பிரதேச சபைச் செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்ய கோரி வலி. கிழக்கு பிரதேச சபை முன்றலில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதில் அமைக்கப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் பார்வையிட செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் அவ்விடத்துக்கு சென்றுள்ளனர்.

முறைப்பாட்டுடன் தொடர்புடையவர் செயலாளரை அச்சுறுத்தி அவரது கைத்தொலைபேசியை பறித்து உடைத்து அச்சுறுத்தி எடுத்துச் சென்றுள்ளார்.
அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது. எனினும் குறித்த நபர் வெளிநாட்டுப் பிரஜை எனவும் தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த நபரை உடனடியாக கைது செய்யக் கோரியே இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

செயலாளரை அச்சுறுத்திய வெளிநாட்டுப் பிரஜை
செயலாளரை அச்சுறுத்திய வெளிநாட்டுப் பிரஜை

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House