
posted 19th January 2022
இன்று புதன்கிழமை (19.01.2022) மன்னார் மாவட்ட செயலகத்தின் அலுவலகர் நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையுடன் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்ற சூரிய பொங்கலும் உழவர் கௌரவிப்பு நிகழ்வும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இப் பொங்கல் விழா செயலகத்துக்கு முன்பாக நடைபெற்ற பின்பு ஐந்து பிரதேச செயலகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட உழவர்களின் கௌரவிப்பு விழாவும், சமூர்த்தி பயனாளிகளுக்கான பொருளாதார உதவித் தொகையும் அவரவருக்கு வழங்கப்பட்டன.
இப் பொங்கல் விழாவில், மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள், பொலிஸ், இராணுவம், கடற்படை, அதிரடிப்படை உயர் அதிகாரிகளும், உழவர்களும் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House