
posted 22nd January 2022
யாழ். போதனா வைத்தியசாலையில் ஏழு பேர் உட்பட வடக்கில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் என்பவற்றில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் நேற்று 155 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் 6 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், இரணைமடு விமானப்படை முகாமில் 4 பேர் என 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதேவேளை யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.
இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 17 பேர் உயிரிழந்தனர் என்று நேற்று வெள்ளிக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்தார்.
இதில், 13 ஆண்களும் 4 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களுள் 10 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.
இந்த மரணங்களின் எண்ணிக்கையுடன் நாட்டில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 272 ஆக உயர்வடைந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House