
posted 7th January 2022
கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களில் இருவர் அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 09.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்தவேளை மூவர் அடங்கிய திருட்டுக்கும்பல் புகுந்துள்ளது.
அதனை அவதானித்த அயலவர்கள் குறித்த வீட்டை வெளியில் சுற்றிவளைத்து மூன்று திருடர்களையும் மடக்கிப் பிடிக்க எத்தனித்தபோது ஒருவர் தப்பியோடிய நிலையில், இருவர் சிக்கிக்கொண்டனர்.
மடக்கிப் பிடிக்கப்பட்ட இருவரும் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House