
posted 25th March 2022

ஏ.சி. யஹியாகான்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் அம்பாறைக்கு இடமாற்றப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது விடயமாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
சாய்ந்தமருதில் நீண்ட காலமாக இயங்கிவரும் மேற்படி அலுவலகத்தின் செயற்பாடுகளை தொடர்ந்தும் அதே இடத்தில் மேற்கொள்ள வேண்டும் என எமது மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம் ஆகியோரிடம் வேண்டியுள்ளேன். இந்த விடயத்தில் தலைவர் ஹக்கீமும் எம்பீக்களும் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம், சாய்ந்தமருதிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
மஹிந்த ராஜபக்ஷவினால் நிறுவப்பட்ட இந்தக் காரியாலயத்தை அவரது புதல்வரான, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நாமல் ராஜபக்ஷ, இடமாற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ் மற்றும் பைசால் காசீம் ஆகியோர் இந்த விடயத்தில் துரிதமாக செயற்பட்டு, இடமாற்றத்தை இரத்து செய்வார்கள் என நான் திடமாக நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House