இது கொலையா? தற்கொலையா?

கிளிநொச்சியில் தீயில் கருகிய நிலையில் தாய், மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தருமபுரம் பொலிஸ் பிரிவில் புன்னைநீராவி, நாதன் குடியிருப்பு பகுதியிலேயே நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்த இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஆனந்தராசா சீதேவி (வயது 47) என்ற 7 பிள்ளைகளின் தாயாரும், அவரது மகளான லக்சிகா (வயது 17) என்பவருமே தீயில் எரிந்து உயிரிழந்தனர்.

இவர்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தீயில் எரிந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. எனினும், நேற்று மாலையே இவர்கள் தீயில் எரிந்து உயிரிழந்த விடயம் தெரிய வந்தது.

தந்தையும் மகனும் கூலி வேலைக்காக வெளிமாவட்டத்துக்கு சென்று திரும்பி வந்த நிலையிலேயே இந்த விடயம் வெளி வந்தது.

இச்சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது கொலையா? தற்கொலையா?

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House