
posted 29th February 2024
உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ. (1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் தேசபந்து தென்னகோனிடம் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)