
posted 5th February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நிந்தவூர் பிரதேச சபையில் சுதந்திரதினம்
இலங்கையின் 76ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் நிந்தவூர் பிரதேச சபையிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச சபைச் செயலாளர் திருமதி திலகா பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் சபைச் செயலாளர் திருமதி பரமேஸ்வரன் தேசியக்கொடியை ஏற்றிவைத்ததுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், நாட்டின் சுதந்திரத்திற்காகவும், நாட்டின் பாதுகாப்பிற்காகவும் பாடுபட்டு மரணித்தவர்களுக்காக இரு நிமிட மௌனம் அனுஷ்டிக்கப்பட்டதுடன், சுதந்திரதின ஞாபகர்த்தமாக பிரதேச சபை வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
உள்ளுராட்சிசபைகள் மக்களுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக்கொண்ட அரச நிறுவனமாகத் திகழ்வதால், மக்கள் சேவைகளை நாம் பொறுப்புடனும், தியாக மனப்பாங்குடனும் அர்ப்பணிப்புடனும் முன்னெடுக்க நாம் இன்றைய தினத்தில் திடசங்கற்பம் பூண வேண்டுமென நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய செயலாளர் திருமதி பரமேஸ்வரன் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)