Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

ஜே.வி.பி குழுவினர் இந்தியா விஜயம்

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் திரு.அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட நால்வர் இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் இருவர் புதுடில்லிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய மக்கள் கட்சி முதலில் ஜனதா விமுக்தி பெரமுனாவில் கட்டமைக்கப்பட்டது, அந்தக் கட்சி முன்பு இந்தியாவுக்கு எதிரான கொள்கையை பின்பற்றியது.

இந்தியாவின் தலையீட்டுடன் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இலங்கையில் மாகாண சபை முறைமை கொண்டுவரப்படுவதற்கு ஜனதா விமுக்தி பெரமுன எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், இந்தியாவை நல்லதொரு பார்வையுடன் கையாள்வதற்கு தேசிய மக்கள் சக்த்தி தயாராக இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் திரு.அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்தியாவுக்கு அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழுவினர் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இரு தரப்பு உறவுகளை வளுப்படுத்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தேசிய மக்கள் சக்தியினர் இந்தியாவினால் அழைக்கப்பட்டுள்ளமை இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பாக பேசப்படும் விவகாரமாக தற்சமயம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)