
posted 17th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு வைபவம்
யாழ்ப்பாணம் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய கல்விக்கு கரம்கொடும்போம் என்ற செய்ற்திட்டத்தின்கீழ் மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய லண்டன் கிளை உறுப்பினர்களான திரு இராஐசுந்தரம் சிங்கவாகனம், திரு பாலசிங்கம் றசியசிங்கம் ஆகியோரின் ரூபா 115000/- நிதிப்பங்களிப்பில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் ஊடாக வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் நேற்று 16.02.2024 வெள்ளிக்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், புத்தகப் பைகள் என்பன வழங்கப்பட்டதுடன் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும் யாழ் வடமராட்சி ஊடக இல்ல வளாகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தின் தலைவர் சின்னத்துரை தில்லைநாதன் தொகையில் இடம் பெற்ற நிகழ்வில் மாணவர்களுக்கான புத்தகப் பைகள், கற்றல் உபகரணங்கள் துவிச்சக்கர வண்டி என்பவற்றை ஊடகவியலாளர்களான இரா மயூரதன், சி. ஜெகதீஸ்வரன், மு. மதிவாணன், ஆகயோரும் தீபன் அச்சக உரிமையாளர் திரு. தீபன், அல்வாய் வடக்கு மகாத்மா முன்பள்ளி ஆசிரியை திருமதி சுகந்தினி ஆகியோர் வழங்கிவைத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)