
posted 14th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
இடமாற்றப் பட்டியலை இரத்துச் செய்யக் கோரி அம்பாறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அண்மையில் கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்ய கோரி பெருந்தொகையான கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களால் அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் மாபெரும் கண்டன பேரணி இடம்பெற்றது.
இன்றைய (14) தினம் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிப்பு குழுக் கூட்டம் அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸிடம் ஆசிரியர்கள் நேரடியாக சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை எடுத்து கூறினர்.
அதனைக் கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்த விடயத்துக்கு நியாயமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)