7 விடயங்களை வலியுறுத்தி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

*7 விடயங்களை வலியுறுத்தி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்*.

நாட்டின் சுதந்திர தினத்தை தமிழர் தேசத்தின் கரி நாளாக பிரகடனப்படுத்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏழு முக்கிய விடயங்களை வலியுறுத்தி இன்று (04) ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி வேண்டும்'
  • 'தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை தேவை'
  • 'தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படுதல் வேண்டும்'
  • 'பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்'
  • 'தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்'
  • 'தமிழர் தாயகத்திலுள்ள வரலாற்றுத் தொல்லியல் சான்றுகளை அழிக்காதே'
  • 'இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வு வேண்டும்'

ஆகிய ஏழு விடயங்கள் இதன்போது வலியுறுத்தப்பட்டன.

நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரிலான மைத்திரி - ரணில் அரசாங்கம், தமிழ் தரப்புடன் இணைந்து தயாரித்த புதிய ஏக்கிய ராஜ்ஜிய (ஒற்றையாட்சி) அரசியலமைப்பு வரைபை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முற்றாக நிராகரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் இன அழிப்புக்கான நீதி, நில ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்படுதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

7 விடயங்களை வலியுறுத்தி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)