
posted 1st February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வடதாரகை திருத்தப் பணி
குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் ‘வடதாரகை படகினை திருத்தம் செய்வதற்கு 32 இலட்ச ரூபாய் செலவாகும் என கடற்படை தெரிவித்துள்ளது.
கச்சதீவு திருவிழாவுக்கு முன்னர் வடதாரகை படகைத் திருத்தம் செய்யமாறு யாழ்.மாவட்ட செயலர் அறிவுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து வடதாரகை படகின் திருத்த வேலைக்கான மதிப்பீட்டை மேற்கொண்ட கடற்படையினர், திருத்தப் பணிகளுக்காக 32 இலட்ச ரூபாய் செலவாகும் எனவும், பழுதுகள் காணப்பட்டால் அவற்றினை திருத்தம் செய்வதற்கு மேலதிக பணம் தேவைப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறிகாட்டுவான்-நெடுந்தீவு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் குமுதினி படகு நேற்று முதல் சேவையில் ஈடுபடும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)