
posted 16th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கு சுயத்தொழில் உபகரணங்கள்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் சுயத்தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலின் பேரில் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் உபகரணங்களும், பொழுதுபோக்குக்காக அவர்களின் வீடுகளுக்கு LED தொலைக்காட்சிகளும் செந்தில் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், சாதனைகள் நிகழ்த்திய தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)