
posted 24th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
கீரிமலை சிவன் மகோற்சவம் இன்று ஆரம்பம்
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான ஈழமணித் திருநாட்டின் வடக்கே அமைந்துள்ள கீரிமலை பதியுறை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது இன்று (24) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்தும் 15 நாட்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தில் 07ஆம் திகதி பெரிய சப்பறத் திருவிழாவும், மறுநாள் காலை இரதோற்சவம் இடம்பெறவுள்ளதுடன் இரவு சிவராத்திரி விசேட பூசைகளுடன் ஆன்மீகம் சார் நிகழ்ச்சியும் இடம்பெற்று மறுநாளான 09 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)