
posted 2nd February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வு
யாழ்ப்பாணம் இந்தியத்துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு, இந்தியலைஞர்கள் வழங்கும் இந்தியாவின் பாரம்பரிய நடனநிகழ்வு கடந்த வியாழக்கிழமை 01.02.2024 அன்று யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்து கொண்டார்.
இதில் ஓடிச் நடனம், கதகளி நடனம், சத்தியா நடனம், மணிப்புரி நடனம், என்னும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதில் தமிழ் அரசியல்வாதிகள், ஆன்மீக தலைவர்கள், பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சான்றோர்கள், கலைஞர்கள், இந்தியத் தூதர அலுவலர்கள் பலரும்கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)