
posted 17th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
இந்தியத் தூதுவர் சந்தோஷ்யாழ்ப்பாணம் வருகை
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேற்று (16) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்ட அவர் காங்கேசன்துறை துறைமுகத்தையும் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து நேற்று (16) மாலை, யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகளை வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனும் பங்கேற்றார்.
தொடர்ந்து, யாழ்ப்பாணம் மத்திய கலாசார நிலையத்தில் நடந்த தியாகராஜ சுவாமிகள் இசை ஆராதனை நிகழ்விலும் தூதுவர் பங்கேற்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)