சிரேஷ்ட ஊடகவியலாளர் வாஸ் கூஞ்ஞ தேசிய கலாவிபூஷணம் விருதைப் பெற்றுக் கொண்டார்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

'வாழும்போதே வாழ்த்துவோம்' என்ற ஏற்பாட்டுக்கு அமைய சங்கவி பிலிம்ஸ் மற்றும் சங்கவி தியேட்டர் பிரைவேட் லிமிட்டட் தலைவர் கலாநிதி துரைராசா சுரேஸ் அவர்களின் ஏற்பாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கலாவிபூஷணம் உலகத் தமிழர் விருது வழங்கும் விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் லோறன்ஸ் கொன்சால் வாஸ் கூஞ்ஞ அவர்களும் தேசிய கலாவிபூஷணம் விருதை பெற்றுக் கொண்டார்.

நான்காவது வருடமாக நடைபெற்ற இவ்வருடத்துக்கான (2023) இவ் விழாவானது சனிக்கிழமை (25.02.2023) மன்னார் பேசாலை சங்கவி திரையரங்கின் மண்டபத்தில் காலை 11 மணி முதல் நடைபெற்றது.

தினகரன் பிரதம ஆசிரியர் ரி. செந்தில் வேலவர் , இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோகசர் புரவல்லர் காசீம் உமர் , அருட்பணி வின்சன்ட் பற்றிக் அடிகளார் (அ.ம.தி) மற்றும் சங்கவி பிலிம்ஸ் மற்றும் சங்கவி தியேட்டர் பிரைவேட் லிமிட்டட் தலைவர் கலாநிதி துரைராசா சுரேஸ் ஆகியோரின் கரங்களினால் இவ் விருதினை அவர் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ தலைமன்னாரை பிறப்பிடமாகவும் பேசாலையை வளர்ப்பிடமாகவும் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர் 2023 ஆம் ஆண்டில் பெற்ற இது இரண்டாவது விருதாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.