
posted 24th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
யாழ்ப்பாணத்துக்கு நேற்று வியாழன் (23) வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனலைதீவில் இடம்பெற்ற அரசியல் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்சிகளிலும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.
நேற்று அனலைதீவு சென்ற அவர், அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளருமான உமாசந்திரா பிரகாஷ், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட தொகுதிகளின் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)