கவிதை நூல் வெளியீட்டு விழா

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை கவிதாயினி மேகா மிர்சா எழுதிய "புல் ஏந்தா பனித்துளிகள்" கவிதை நூல் வெளியீட்டு விழா அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச்சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம். அறூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச். அப்துல் றஹீம், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபிர், பொத்துவில் மக்கள் வங்கிக் கிளையின் வியாபார திட்ட முகாமையாளர் எம்.ஐ.எம். நபில், சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி முகாமையாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாநிதி ரியாத் ஏ. மஜித் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நூல் ஆய்வை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, நூல் அறிமுகத்தை பன்னூலாசிரியர் எஸ்.எல். மன்சூர், நூல் நயத்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜூல்பிகா ஷெரிப் ஆகியோர் நிகழ்த்தினர்.

இவ்விழாவில் சட்டத்தரணிகள், வைத்தியர்கள், இலக்கியவாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

கவிதை நூல் வெளியீட்டு விழா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More