
posted 26th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்டத்தின் (LDSP) கீழ் சம்மாந்துறை பிரதேச சபையினால் வீரமுனை பிரதேசத்தில் புதிதாக அபிவிருத்தி செய்யப்படும் சிறுவர் பூங்காவை சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களான ஏ.எச்.எம்.ஹாலித், பீ.எம். மீராமுகைதீன் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை புதிய தவிசாளர் மாஹிர் பதவியேற்றது முதல் மக்கள் பிரச்சினைகளை நேரில் கண்டறிந்து தீர்வுகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)