
posted 26th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
4kg 100g கஞ்சாவுடன் 32வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டீல் வைத்து புளியங்குளம் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தரினரால் வெள்ளி (24) கைது செய்யப்பட்டார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருத்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டு உரிமையாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணும், மீட்கப்பட்ட கஞ்சா பொதியும் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)