
posted 27th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கடற்றொழிலாளர்கள் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற்றொழில் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாக, வெளியான செய்தி தொடர்பில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலிலையே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில்,
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடல்பரப்பில் கடற்றொழில் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் நேரில் சந்தித்து பேச வாய்ப்பு தருமாறும் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோருவது எனவும், ஐனாதிபதியிடம் இருந்து, கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காது விட்டால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது. அத்துடன், பாராளுமன்றில் பேசிய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமையை பரிசீலிப்பதாக தெரிவித்தமை ஏற்றுக்கொள்ள முடியாது.
புனித ஸ்தலமான கச்சதீவை கடற்றொழிலாளர்கள் பேச்சு என்ற பெயரில் பேச்சுக்களை நடத்த அனுமதிக்கக்கூடாது என யாழ் மறை மாவட்ட ஆயரிடம் ஊடகங்கள் வாயிலாக கோருவது என்றும் இதன்போது முடிவுகள் எடுக்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)